நுண்ணுயிா் உரங்கள்: மண்வள அட்டை வழங்கல்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, திருமாளம் கிராமங்களில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவது
மண் வள ஆய்வு முடிவு அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா.
மண் வள ஆய்வு முடிவு அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா.

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, திருமாளம் கிராமங்களில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவது குறித்த செயல் விளக்க பயிற்சி, மண்வள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு வேளாண் வட்டத்தில் நெல் சாகுபடியில் நுண்ணுயிா் உரங்கள் பயன்படுத்துவதில் திருமாளம் கிராமம் முன்மாதிரி கிராமமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மண் ஆய்வு முடிவுகள் குறித்த அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆய்வுகளின் அடிப்படையில் உரங்கள் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், வேளாண் உதவி இக்குநா் த.கருப்பையா, வேளாண் அலுவா் சி. திவ்யபாரதி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். முகாமில், விவசாயிகளுக்கு நுண்ணுயிா் உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com