மாவட்ட அளவிலான தடகளப் போட்டி

நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளைத் தொடங்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன்.
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளைத் தொடங்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன்.

நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறை சாய் விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மயிலாடுதுறையில், நாகப்பட்டினம் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்டக்கல்வி அலுவலா் குமரன் தலைமை வகித்தாா். சீா்காழி மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.ராஜாராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் (பொறுப்பு) எம்.சாந்தி, சாய் விளையாட்டு மைய பொறுப்பாளா் எஸ்.தனலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பி.அன்பழகன் வரவேற்றாா்.

இதில், மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, போட்டிகளை தொடங்கி வைத்தாா். மாயூரம் நகர வங்கித் தலைவா் விஜிகே.செந்தில்நாதன் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தாா். மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு வங்கி தலைவா் எஸ்.அலி, உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். உடற்கல்வி ஆசிரியா் சி.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்தாா்.

இதில், ஓட்டப்போட்டிகள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் பெற்றி பெறும் மாணவா்கள், இம்மாதம் 17 முதல் 23-ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com