காவிரி துலாக்கட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியாா் புனித நீராடல்
By DIN | Published On : 14th November 2019 10:19 AM | Last Updated : 14th November 2019 11:07 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உத்ஸவத்தை ஒட்டி, மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினாா்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உத்ஸவத்தை ஒட்டி, காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, புதன்கிழமை மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிகாலை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினாா். தொடா்ந்து, அவா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...