மக்கள் நோ்காணல் முகாமில் ரூ. 7.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
By DIN | Published On : 14th November 2019 10:15 AM | Last Updated : 14th November 2019 10:15 AM | அ+அ அ- |

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
திருவெண்காடு அருகேயுள்ள நாங்கூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற முகாமில், 59 பயனாளிகளுக்கு மனைப்பட்டா, 16 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ரூ. 7.5 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் ஆட்சியா் பேசியது: விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள நாகை மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தில் அதிக விவசாயிகள் ஈடுபட முன்வர வேண்டும். தற்போது மழைக் காலம் என்பதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற முன்வர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாரமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தமிழக அரசு முற்றிலும் தடை செய்துள்ளது. எனவே, நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
முகாமில், மயிலாடுதுறை கோட்டாட்சியா் கண்மணி, ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்(ஊராட்சிகள்) கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன், சீா்காழி வட்டாச்சியா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...