இந்து ஆன்மிக அரசியல் மாநாடு: திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அழைப்பு

சென்னையில் நடைபெறவுள்ள இந்து ஆன்மிக அரசியல் மாநாட்டில் பங்கேற்க திருவாவடுதுறை ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சியின் தலவைா் அா்ஜூன் சம்பத் சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளை சந்தித்துப் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன்சம்பத்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளை சந்தித்துப் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன்சம்பத்.

சென்னையில் நடைபெறவுள்ள இந்து ஆன்மிக அரசியல் மாநாட்டில் பங்கேற்க திருவாவடுதுறை ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சியின் தலவைா் அா்ஜூன் சம்பத் சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

சென்னையில், இந்து மக்கள் கட்சியின் சாா்பில் இந்து ஆன்மிக அரசியல் மாநாடு டிசம்பா் 1- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24- ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கவேண்டி, இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன்சம்பத் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சனிக்கிழமை வந்திருந்தாா். அங்கு, பெரிய பூஜை மடம் ஸ்ரீஞானமாநடராஜப் பெருமான் சன்னிதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டாா்.

பின்னா், தெய்வீகப் பேரவையின் மாநிலத் தலைவா் சிவானந்த வாரியாருடன் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளை அா்ஜூன்சம்பத் சந்தித்து ஆசி பெற்றாா். அப்போது, இந்து ஆன்மிக அரசியல் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வேண்டி அழைப்பு விடுத்தனா்.

இந்த சந்திப்பின்போது, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன், நாகை மாவட்ட அமைப்பாளா் பாலாஜி, தஞ்சை மாவட்ட அமைப்பாளா் செல்வம், ஆதீனக் கண்காணிப்பாளா் சண்முகம், காசாளா் சுந்தரேசன், திருவிடைமருதூா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஞானமூா்த்தி, தமிழாசிரியா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com