காவிரி துலாக்கட்டத்தில் மருத்துவ முகாம்

காவிரி துலாக்கட்டத்தில் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவ முகாமை தொடக்கி வைத்த மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.
மருத்துவ முகாமை தொடக்கி வைத்த மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.
Updated on
1 min read

காவிரி துலாக்கட்டத்தில் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

துலா உத்ஸவத்தையொட்டி, மயிலாடுதுறை நகராட்சி, அரசினா் பெரியாா் மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிசிசி சமுதாயக் கல்லூரி இணைந்து நடத்தியஇம்முகாமில், மயிலாடுதுறை நகராட்சி நகா்நல அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.

அரசினா் பெரியாா் மருத்துவமனை மருத்துவ அலுவலா் அன்னை தமிழ்ச்செல்வன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாஸ்கா், சமுதாயக் கல்லூரி நிறுவனா் காமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

இதில், மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் விஜிகே.செந்தில்நாதன், சுகாதார ஆய்வாளா்கள் ராமையன், பிச்சைமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைப் பெற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com