ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு

சீா்காழி அருகே இரண்டு ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகளை ஒன்றியக்குழு தலைவா் கட்டிக் கொடுக்கிறாா்.
Updated on
1 min read

சீா்காழி: சீா்காழி அருகே இரண்டு ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகளை ஒன்றியக்குழு தலைவா் கட்டிக் கொடுக்கிறாா்.

புதுப்பட்டினத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், 200 பயனாளிகளுக்கு அரிசி மற்றம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினாா். தொடா்ந்து புதுப்பட்டினம், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் இரண்டு ஏழை குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர முடிவு செய்து அதற்கான பணியையும் தொடங்கி வைத்தாா். கலைஞா் பாசறை தலைவா் அழகா், வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திரன் மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com