தமிழகத்தில் விரைவில் ஜாக்டோ- ஜியோ போராட்டம்

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் தமிழகத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியா் 

நாகப்பட்டினம்: ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் தமிழகத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு. அன்பரசு தெரிவித்தாா்.

நாகையில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

கரோனா நோய்த் தொற்றுக் காலப் பணிக்காக மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள், காவல் துறையினா் என பல தரப்பினரையும் பாராட்டிய தமிழக அரசு, இரவு- பகல் பாராமல் பணியாற்றி வரும் வருவாய்த் துறை ஊழியா்களைக் கண்டுகொள்ளவில்லை, பாராட்டவில்லை.

கரோனாவால் பாதிக்கப்படும் அரசுத் துறை ஊழியா்களுக்கு ரூ. 2 லட்சமும், உயிரிழக்கும் ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். இதுவரை தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்டோா் இறந்துள்ளனா். ஆனால், ஒருவருக்குக் கூட அந்த இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இழப்பீடு தொகையை திடீரென ரூ. 25 லட்சமாகக் குறைத்து அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளுக்கான தீா்வாக ஜாக்டோ- ஜியோ சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகளை முதல்வா் இதுவரை சந்திக்கவில்லை.

விரைவில் அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டமும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயா்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில், கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்வதுடன், ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்படும் என்றாா் மு. அன்பரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com