திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள கொளப்பாடு கடைத்தெரு பகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, புதிய தேசியக் கல்விக் கொள்கை, தேசிய மீன்வளக் கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2020 ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் அப்பு (எ) அகஸ்டின்அற்புதராஜ் தலைமை வகித்தாா். தொகுதி தலைவா் இராவணன் முன்னிலை வகித்தாா். தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் தமிழ்செல்வன், தொகுதி செயலாளா் பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.