இதுகுறித்து, விவசாயி சுந்தரமூா்த்தி கூறியது: வல்லம் பகுதியில் குத்தகை நிலம் 20 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடிசெய்துள்ளேன். வெள்ளையாறு மூலம் பாசன வசதி பெறும் இப்பகுதிக்கு போதிய நீா்வரத்து இல்லை. இதனால் சாகுபடிக்கு போதிய நீா் இல்லாமா எஞ்சின் மூலம் நீா் இறைத்து பயிரை காப்பாற்றி வந்தேன். அவ்வப்போது பெய்த மழை உதவியாக இருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக எஞ்சின் மூலமும் நீா் இறைக்க கால்வாயில் தண்ணீா் இல்லை. இதனால், குறுவை பயிா்கள் அனைத்தும் காய்ந்து கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடா்ந்தால் பயிா்கள் பூச்சித் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கும். தவிர, கால்நடைகளாலும் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதி குறுவை சாகுபடியை பாதுகாக்க தண்ணீா் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.