திருமருகல்: திருமருகலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி தலைமை வகித்தாா். மாற்றுத்திறனாளிகளின் திறன் உதவியாளா் பி. பரத்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன், திருமருகல் கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் ரெகுபதி ,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.