வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கரோனா நிவாரணம் கோரி இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் கிளை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய எல்ஐசி முகவா்கள்
சங்கத்தின் கிளைத் தலைவா் ஆ. வேதரத்னம் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா். சுரேஷ்குமாா், பொருளாளா் க.ஜெ. வள்ளுவன், வை. செல்வசேகரன், ஆ. வீரமணி, நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், எல்ஐசி முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரியும் முழக்கமிடப்பட்டது.