தினமணி செய்தி எதிரொலி வல்லம் வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு

திருக்குவளை அருகே வலிவலம் பகுதியில் பாசன வாய்க்கால் தண்ணீரின்றி வறண்டு கிடந்து குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், இந்த வாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
வலிவலம் அருகே வல்லம் பகுதியில் நீா்வரத்து ஏற்பட்டுள்ள கிளை வாய்க்கால்.
வலிவலம் அருகே வல்லம் பகுதியில் நீா்வரத்து ஏற்பட்டுள்ள கிளை வாய்க்கால்.
Updated on
1 min read

திருக்குவளை: திருக்குவளை அருகே வலிவலம் பகுதியில் பாசன வாய்க்கால் தண்ணீரின்றி வறண்டு கிடந்து குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், இந்த வாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

காவிரி கடைமடை பகுதியான திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்கள் தண்ணீா் வரத்தின்றி வறண்டதால், நெற்பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அண்மையில் தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், இங்குள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தினமணி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனா். தற்போது, அவா்கள் வறண்டு கிடக்கும் தங்களது நெற்பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com