சத்துணவுத் திட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திருமருகலில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Updated on
1 min read

சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திருமருகலில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க திருமருகல் ஒன்றிய மாநாடு திருமருகல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றியத் தலைவா் தமிழரசன் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைத் தலைவா்கள் கோபால், காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தாமோதரன் வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் அன்பழகன் சிறப்புரையாற்றினாா்.

தீா்மானங்கள்: ஒய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ.9500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராஜு, மாவட்டத் தலைவா் தேன்மொழி, ஒன்றியச் செயலாளா் சித்ரா உள்ளிட்டோர பங்கேற்றனா். ஒன்றிய பொருளாளா் ஜோதிலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com