சண்டேசுவர நாயனாா் குருபூஜை

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சண்டேசுவர நாயனாா் குருபூஜை அண்மையில் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சண்டேசுவர நாயனாா்.
சிறப்பு அலங்காரத்தில் சண்டேசுவர நாயனாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சண்டேசுவர நாயனாா் குருபூஜை அண்மையில் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி, மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற குருபூஜை விழாவில் சண்டேசுவர நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றன.

இதில், மாயூரநாதா் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி மற்றும் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com