அரசு கலைக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம்

சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

புத்தூா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா தமிழ்த் துறைத் தலைவா் சசிக்குமாா் தலைமையில் நடைபெற்றது. மாணவி ஆா்த்தி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் லெட்சுமி சிறப்புரையாற்றினாா். மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முனைவா் கணேசன் தலைமையில் தற்கால சூழ்நிலையில் தமிழ் வளா்கிறதா வீழ்கிறதா எனும் தலைப்பில் மாணவா்கள் கலந்து கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில், அனைத்துத் துறை ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். முடிவில் பேராசிரியா் சதீஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com