நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனையும் வீடு வீடாக நடைபெறுகிறது.
தனியார் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தை செயல் அலுவலர் கு.குகன் தொடங்கி வைத்தார். வைத்தீஸ்வரன்கோயில் கோயில் மேலவீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் நடராஜன் பரிசோதனைக் கருவிகளை நன்கொடையாக அளித்திருந்தார்.
அதன்படி வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் வீடு, வீடாக முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.