மின்சாரம் பாய்ந்ததில் பஞ்சாயத்து செயலாளர் பலியானார்.
சீர்காழியை அடுத்த பட்ட விளாகம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆசிர்வாதம் (45). இவர் கொண்டல் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள தனது வயலில் உர மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.
அங்கு அவர் மின் மோட்டாருக்கு செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்ததை அறியாமல் சென்ற அந்தோனி ஆசிர்வாதம் மீது மின்சாரம் பாய்ந்து கீழே மயங்கி விழுந்து கிடந்தார். இதனை தாமதமாக பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்தோணியை சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்கின்றனர்.