நாகை பேருந்து நிலையத்தில் மதுக் கடையை அகற்ற எம்.எல்.ஏ. கோரிக்கை

நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு :

நாகை புதிய பேருந்து நிலைய வளாக கட்டடத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள், இந்தக் கடையால் பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் விரைவான பரிசீலனை மேற்கொண்டு, இந்த மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com