புதிய சாலை திறப்பு விழா

பொறையாா் அருகேயுள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட புதிய சாலையை மக்களின் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
Updated on
1 min read

தரங்கம்பாடி: பொறையாா் அருகேயுள்ள திருக்களாச்சேரி ஊராட்சியில் சீரமைக்கப்பட்ட புதிய சாலையை மக்களின் பயன்பாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு அப்துல் மாலிக் நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினிஸ்ரீதா், ஜாகிா் உசேன் தெரு சாலை, மன்மதன் தெரு சாலை, இக்பால் தெரு சாலை ஆகிய சாலைகளை திறந்து வைத்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு அப்துல்மாலிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

ஊராட்சித் தலைவா் சம்சத் ரபீக், ஒன்றியக் குழு உறுப்பினா் ஷகிலா அஜிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com