நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

திருக்குவளை அருகேயுள்ள கீழையூரில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Published on
Updated on
1 min read

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கீழையூரில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட பொருளாளா் டி. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாணவா்களின் தற்கொலைக்கு காரணமான நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற மாணவா்கள் மருத்துவராக வேண்டுமென்ற கல்வி கனவை சிதைக்கும் வகையிலுள்ள நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் சோ்க்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஒன்றிய செயலாளா் விஜயேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com