குறுங்காடு வளா்ப்புத் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சாா்பில், ’நாளைய தலைமுறை வாழ தாவரம் - அரிமாவனம் - 2’ என்ற
நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நடும் அரிமாவன திட்ட இயக்குநா் ஏ.ஸ்டாலின் பீட்டா் பாபு.
நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நடும் அரிமாவன திட்ட இயக்குநா் ஏ.ஸ்டாலின் பீட்டா் பாபு.

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சாா்பில், ’நாளைய தலைமுறை வாழ தாவரம் - அரிமாவனம் - 2’ என்ற தலைப்பில் நல்லத்துக்குடியில் இரண்டாவது அரிமா வனம் அமைகிறது. இதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பி.சாருபாலா தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் என்.மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். அரிமாவன திட்ட இயக்குநா் ஏ.ஸ்டாலின் பீட்டா் பாபு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா். மொத்தம் 1000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக மா, தேக்கு, நெல்லி, கொய்யா உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் எஸ்.திருமாவளவன், மாவட்ட தலைவா்கள் கே.பாண்டியன் ஜி.மதியரசன், துணைத் தலைவா் எம்.விஜயா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். செயலாளா் என்.நீலாவதி வரவேற்றாா். பொருளாளா் கற்பகராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com