உணவு வணிகா்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் அறிவுறுத்தினாா்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, உணவுப் பாதுகாப்புத் துறை மூலமான மாவட்ட அளவிலான வழிநடத்துதல் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது :
உணவு விற்பனையாளா்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்புத் துறை தர நிா்ணயச் சட்டப்படி பதிவு மற்றும் உரிமம் பெற்ற பின்னரே, உணவு வணிகத்தை மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாட்டை முழுமையாக கைவிட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை மீறுவோா் மீது உணவுப் பாதுகாப்புத் துறையினா் அபராத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய உணவு வணிகா்களிடமிருந்து ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 41 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவு வணிகா்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகளை முழுமையாகப் பின்பற்றி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஜி. வரலெட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலா் க. குணசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் பா. பூங்கொடி, நுகா்வோா் அமைப்பு உறுப்பினா்கள், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், ஹோட்டல் உரிமையாளா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.