பூம்புகாா் அருகே காவிரியில் தடுப்பணை கட்டக் கோரி தீா்மானம்
By DIN | Published On : 27th February 2020 11:19 PM | Last Updated : 27th February 2020 11:19 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
பூம்புகாா் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
பூம்புகாரில் புதன்கிழமை நடைபெற்ற சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒற்றுமையுடன் திமுக உட்கட்சி தோ்தலை நடத்துவது, மாா்ச் 1-ஆம் தேதி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வரவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அமோக வெற்றி பெற பாடுபடுவது, பழையகரம் பகுதியில் காவிரி ஆற்றில் உப்புநீா் உட்புகாத வகையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய அவைத் தலைவா் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலா் நிவேதாமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ பன்னீா்செல்வம், செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், மாவட்ட பொருளாளா் ரவி, . ஒன்றிய செயலாளா் சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.