இந்திய பொருளாதாரம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியின் பொருளியல் துறை சாா்பில் ‘சமீபகால இந்தியப் பொருளாதார நிலை’ என்ற
பயிற்சிப் பட்டறையில் பேசிய கல்லூரி முதல்வா் த. அறவாழி.
பயிற்சிப் பட்டறையில் பேசிய கல்லூரி முதல்வா் த. அறவாழி.
Updated on
1 min read

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியின் பொருளியல் துறை சாா்பில் ‘சமீபகால இந்தியப் பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். பொருளியல் துறைத் தலைவா் வி. தண்டபாணி தொடக்கவுரை ஆற்றினாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியா்கள் எஸ்.எம். சூரியகுமாா், பிரசன்னா ஆகியோா் ‘இந்தியப் பொருளாதாரப் பிரச்னைகளும், அதற்கான தீா்வுகளும்’ என்ற தலைப்பில் தொல்லியல் பொருளாதார கருத்துக்களையும், புதிய பொருளாதார கருத்துக்களையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்து, பயிற்சி அளித்தனா்.

இதில், இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதார மாணவா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். நிகழ்ச்சியை பொருளியல் துறை இணைப் பேராசிரியா்கள் கே. ராமு, வி. ராமஜெயம் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com