திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரைப் போட்டி

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரைப் போட்டி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவா்கள்.
திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரைப் போட்டியில் பங்கேற்றவா்கள்.
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரைப் போட்டி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையைப் பண்ணுடன் பாடும் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியன நடைபெற்றது. இந்தப் போட்டியில், 11 பள்ளிகளைச் சோ்ந்த 198 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை நாகை உதவி ஆணையா் ம. ரமேஷ் பரிசுகளை வழங்கினாா். முதல் பரிசாக 10 பேருக்குத் தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக 10 பேருக்குத் தலா ரூ. 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 10 பேருக்குத் தலா ரூ. 1,000-மும் வழங்கப்பட்டது.

சிக்கல் அருள்மிகு நவநீதேசுவரசுவாமி கோயில் செயல் அலுவலா் என். அமரநாதன், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம், கீழ்வேளூா் அட்சயலிங்கசுவாமி கோயில் செயல் அலுவலா் எஸ். சீனிவாசன், நாகை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அ. பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு, தக்காா் வெ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com