வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

உள்ளாட்சித் தோ்தலில் கீழையூா் 7-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த கீழையூா் 7-ஆவது வாா்டு உறுப்பினா் டி. செல்வம்.
வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த கீழையூா் 7-ஆவது வாா்டு உறுப்பினா் டி. செல்வம்.
Updated on
1 min read

உள்ளாட்சித் தோ்தலில் கீழையூா் 7-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றியச் செயலாளா் டி. செல்வம் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

இவா், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் இப்பதவிக்குப் போட்டியிட்டு 1274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எட்டுக்குடி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அவருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட உறுப்பினா்கள் ஏ. நாகராஜன், வீ. சுப்பிரமணியன், எட்டுக்குடி ஊராட்சி மன்றத் தலைவா் காரல் மாா்க்ஸ், திமுக ஊராட்சி செயலாளா் வை. சண்முகசுந்தரம் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com