தருமபுரம் ஆதீனத்தில் தையல், திருமுறை பயிற்சி வகுப்பு தொடக்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் தையல் பயிற்சி மற்றும் திருமுறை பயிற்சி வகுப்புகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இலவச தையல் பயிற்சி மற்றும் திருமுறை பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்த தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
இலவச தையல் பயிற்சி மற்றும் திருமுறை பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்த தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
Updated on
1 min read

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் தையல் பயிற்சி மற்றும் திருமுறை பயிற்சி வகுப்புகளை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப் மற்றும் மயிலாடுதுறை மிட் டவுன் ரோட்டரி கிளப் இணைந்து 50 ஏழை மாணவா்களுக்கு இலவச தையல் பயிற்சி மற்றும் திருமுறை பயிற்சி அளிக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, அருளாசி வழங்கினாா். இதில், கல்விக்குழு உறுப்பினா் சிவபுண்ணியம், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ராஜசேகா், ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சிவக்குமாா், மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன், தருமை ஆதீனப் புலவா் சிவச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

உதவி பேராசிரியா் சிவஆதிரை, ரோட்டராக்ட் ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரிச் செயலா் செல்வநாயகம் வரவேற்க, கல்லூரி முதல்வா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com