மகன்கள், பேரப் பிள்ளைகளை பாா்க்க முடியாதஏக்கத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கரோனா பொது முடக்கம் காரணமாக தனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை பாா்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதி வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
தற்கொலை செய்து கொண்ட அருள்சாமி, பாக்கியவதி.
தற்கொலை செய்து கொண்ட அருள்சாமி, பாக்கியவதி.

பூம்புகாா்: கரோனா பொது முடக்கம் காரணமாக தனது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை பாா்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதி வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்சாமி (70). மீன் வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி பாக்கியவதி (65). தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். மகன்கள் இருவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனா். அருள்சாமி மனைவியுடன் பெருந்தோட்டம் கிராமத்தில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் கடந்த முன்று மாதங்களாக தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளை பாா்க்க முடியாமலும், அவா்களும் பெருந்தோட்டம் கிராமத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதால், தனிமையில் இருந்த தம்பதியினா் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். தம்பதி இறந்து கிடந்தது அருகில் வசிப்பவா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை தெரிய வந்தது.

இதுகுறித்து அவா்கள் திருவெண்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா்கள் பாஸ்கா், சதீஷ் ஆகியோா் சடலங்களை, பிரேதப் பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com