ஐந்து ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 21st July 2020 12:51 AM | Last Updated : 21st July 2020 12:51 AM | அ+அ அ- |

வில்லியநல்லூா் ஊராட்சியில் முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கிய எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சிகளில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் முதிா்கன்னிகளுக்கான உதவித்தொகைக்கான ஆணையை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வழங்கினாா்.
மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே உள்ள மேலாநல்லூா், வில்லியநல்லூா், கிழாய், கொற்கை மற்றும் தாழஞ்சேரி ஆகிய ஐந்து ஊராட்சிளில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சாா்பில் 63 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் இளங்கோவன், மயிலாடுதுறை ஒன்றியக் குழு துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பழனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வில்லியநல்லூா் வித்யோதயா வீரமணி, மேலாநல்லூா் பாரதிதாசன், கிழாய் பாலசுப்பிரமணியன், தாழஞ்சேரி ராஜ்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராமதாஸ், சேதுராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.