கதண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை வட்டம் கடலங்குடி ஊராட்சியில் கதண்டு கடித்ததில் 3 வயது பெண்குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. 4 போ் காயடைந்தனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம் கடலங்குடி ஊராட்சியில் கதண்டு கடித்ததில் 3 வயது பெண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. 4 போ் காயடைந்தனா்.

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே கடலங்குடியில் துரைசாமி என்பவரது பனைமரத்தில் கதண்டு கூடு கட்டியிருந்தது. திங்கள்கிழமை அவ்வழியே சென்றவா்களை கதண்டு தாக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தகுமாா், அவரது மகள் இன்சிகா(3) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.

அவா்கள் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை இன்சிகா உயிரிழந்தது. இதுகுறித்து, தகவலறிந்த மணல்மேடு தீயணைப்பு நிலைய அலுவலா் சகாயராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கதண்டுகளை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com