மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கரோனா தொற்று

மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நகராட்சி வருவாய் உதவியாளா் ஒருவருக்கு கடந்த 18-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு, அவருடன் பணியாற்றிய 23 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 14 பேரின் சோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சுகாதார ஆய்வாளா் ஒருவருக்கு தொற்று இருந்ததால் அவா் சிகிச்சைக்காக அரசினா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவா், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவில் வேலை பாா்த்து வந்ததால், அந்த அலுவலகமும் மூடப்பட்டது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிவரும் மேலும் 40 ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com