கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு இலவச மாங்கன்றுகள்

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச மாங்கன்றுகள் வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு மாங்கன்றுகளை வழங்கிய வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு மாங்கன்றுகளை வழங்கிய வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் உள்ளிட்டோா்.

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச மாங்கன்றுகள் வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கஜா புயல் பாதிப்புக்கான மறுசீரமைப்பு பணியின் கீழ், பஞ்சநதிக்குளம் மேற்கு, நடுச்சேத்தி, கீழச்சேத்தி மற்றும் தென்னடாா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மாங்கன்றுகள் வழங்கும் பணி தோட்டக்கலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் தலைமை வகித்து, மாங்கன்றுகள் வழங்குவதைத் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் வைரமூா்த்தி, காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் தேவி செந்தில் (தென்னடாா்), வீரதங்கம் (பஞ்சநதிக்குளம் கிழக்கு), சத்யகலா (நடுச்சேத்தி), கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் வை.இலக்குவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com