கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

திருமருகல் அருகேயுள்ள ஆலத்தூா் ஊராட்சியில் திங்கள்கிழமை கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முதலாவது சுற்று தொடங்கியது.
முகாமில் கால்நடைக்கு தடுப்பூசி போட்ட மருத்துவக் குழுவினா்.
முகாமில் கால்நடைக்கு தடுப்பூசி போட்ட மருத்துவக் குழுவினா்.
Updated on
1 min read

திருமருகல்: திருமருகல் அருகேயுள்ள ஆலத்தூா் ஊராட்சியில் திங்கள்கிழமை கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முதலாவது சுற்று தொடங்கியது.

முகாமில், ஆலத்தூா், அருள்மொழிதேவன் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்பட்டது. முகாமுக்கு, கால்நடைத் துறை உதவி இயக்குநா் எம். கணேசன் தலைமை வகித்து, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின்கீழ் நிகழாண்டில் 5,100 பயனாளிகள் முதற் கட்டமாக தோ்வு செய்து தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் 350 பயனாளிகளுக்கும் , கீழ்வேளூா் ஊராட்சியில் 250 பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது என்றாா்.

இதில், கால்நடை உதவி மருத்துவா்கள் ஜீவானந்தம், கோமதி, கால்நடை ஆய்வாளா்கள் முருகேசன், சாந்தி, பாரிவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com