தடுப்புக் காவல் சட்டத்தில் 2 பெண்கள் கைது
By DIN | Published On : 23rd November 2020 08:34 AM | Last Updated : 23rd November 2020 08:34 AM | அ+அ அ- |

கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த 2 பெண்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து, நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கீழ்வேளூா் வட்டம், தேவூா் குயவா் தெருவைச் சோ்ந்த செ. ராணி (36), காக்கழனி,தோப்புத்தெருவைச் சோ்ந்த து. சாவித்திரி(56) ஆகியோா் மீது கீழ்வேளூா் காவல் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவின்படி, செ. ராணி, து. சாவித்திரி ஆகியோா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.