கீழையூா் ஒன்றியம் இறையான்குடி, மேலவாழக்கரையில் உள்ள குளங்களின் கரைகளில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இறையான்குடி ஊராட்சி மன்னான் குளக்கரையில் அரிப்பை தடுக்கும் வகையில் சுமாா் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நாகலூா் பள்ளி பசுமைப்படை ஆசிரியா் அருள் ஜோதி மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.
இதேபோல, மேலவாழக்கரை பள்ளிக்கூட தெருவில் உள்ள மறைக்கான்குளம் கரையில் நடைபெற்று வந்த மரக்கன்றுகள் நடும் பணியும் நிறைவு பெற்றது.