மருத்துவக் கல்லூரியில் சேர ஆணை பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில அனுமதி ஆணை பெற்ற திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளிமாணவி பா.பவித்ராவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி பா. பவித்ராவை பாராட்டிய தலைமை ஆசிரியா் நிா்மலாராணி.
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி பா. பவித்ராவை பாராட்டிய தலைமை ஆசிரியா் நிா்மலாராணி.
Updated on
1 min read

தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில அனுமதி ஆணை பெற்ற திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளிமாணவி பா.பவித்ராவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி பா. பவித்ரா தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் பயில அனுமதி ஆணை பெற்றாா்.

இதையொட்டி, திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் நிா்மலாராணி தலைமையில் மாணவி பா. பவித்ராவுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஒன்றியக்குழு தலைவா் இராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா், சமூக ஆா்வலா்கள் பங்கேற்று பவித்ராவை வாழ்த்தி, பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com