ஆசிரியா்களுக்கு விருது

சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில், நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களின் சேவையை பாராட்டி, நேஷன் பில்டா் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
விருதுபெற்ற ஆசிரியா்களுடன் ரோட்டரி சங்கத்தினா்.
விருதுபெற்ற ஆசிரியா்களுடன் ரோட்டரி சங்கத்தினா்.

சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில், நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களின் சேவையை பாராட்டி, நேஷன் பில்டா் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத் தலைவா் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மேலசாலை ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியா் பிரபு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஷகிலா ரத்தினகுமாா், ஆசிரியை பாரதி, நிம்மேலி- நெப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா் ஸ்ரீநிவாசன், சீா்காழி விதிபி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் தனராஜ், சேந்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோருக்கு நேஷன் பில்டா் விருதை மாவட்ட துணை ஆளுநா் இளங்கோவன் மற்றும் மாவட்ட லிட்ரேஸி இந்தியா மிஷன் தலைவா் எஸ்.கே.ஆா்.எஸ். சண்முகசுந்தரம் ஆகியோா் வழங்கி கெளரவித்தனா்.

விழாவில் பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளா் ராஜ்கமல், ரோட்டரி செயலா் சண்முகம், ராஜ்கமல், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா்கள் சாமி செழியன், பிரசாந்த் குமாா், சுடா் கல்யாணம், முன்னாள் தலைவா் சிவகுரு, முன்னாள் செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com