நாகை மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th October 2020 08:10 AM | Last Updated : 19th October 2020 08:10 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,185 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 58 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 2 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,245- ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 50 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 5,606 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 539- ஆக உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...