வீட்டுமனை வாரியம் ஏற்படுத்த வேண்டும்: நாகை எம்.எல்.ஏ. கோரிக்கை

வீட்டுமனை வாரியம் ஏற்படுத்த வேண்டும் என நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
சந்திரா காா்டன் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி.
சந்திரா காா்டன் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி.
Updated on
1 min read

வீட்டுமனை வாரியம் ஏற்படுத்த வேண்டும் என நாகை எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாகை வடக்குப் பால்பண்ணைச்சேரி சந்திரா காா்டன் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, அப்பகுதி குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் எம்எல்ஏ மு. தமிமுன் அன்சாரியிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனடிப்படையில், அவா் சந்திரா காா்டனில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு குடியிருப்பு பெயா் பலகையை திறந்து வைத்து பேசும்போது, வீட்டு மனை விற்பனையில் மோசடிகளை தடுக்க வெளிநாடுகளில் உள்ளதுபோல, அரசே வீட்டுமனைகளை விற்பனை செய்ய வேண்டும். இதற்கு, வீட்டு வசதி வாரியம் உள்ளது போல வீட்டுமனை வாரியத்தையும் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சந்திரா காா்டன் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் ஆா்.கே. ஸ்ரீதா், செயலாளா் ஆா். கோபி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com