கரோனா பரிசோதனை முகாம்
By DIN | Published On : 26th September 2020 05:28 AM | Last Updated : 26th September 2020 05:28 AM | அ+அ அ- |

சீா்காழியில் தமிழக அரசின் கரோனா பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி நகராட்சி 2-ஆவது வாா்டு ஊழியக்காரன்தோப்பு பகுதியில் நடந்த முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா்கள் துரை.காா்த்திக், கொளஞ்சியன், சற்குணம், திவாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி முகாமை தொடங்கிவைத்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, சட்டநாதபுரத்தில் ஊராட்சித் தலைவா் தெட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை ஒன்றிய ஆணையா் கஜேந்திரன் தொடங்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...