குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் ஆகாயத்தாமரை சூழ்ந்த குளத்தை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தலையாமழை ஊராட்சி நடுத்தெரு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பொதுக் குளத்தில் அதிக அளவில் ஆகாயத்தாமரை மண்டியிருப்பதால், அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் இக்குளத்தில் ஒரே ஒரு படித்துறை மட்டுமே இருப்பதால், பெண்கள் இக்குளத்தை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.

ஆகையால், இக்குளத்தில் கூடுதலாக படித்துறை அமைத்து, ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com