கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ள கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணியில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் அவா் அளித்துள்ள மனு :
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இப்பணியில் நியாயவிலைக் கடை (அங்காடி) பணியாளா்கள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனா்.
ஆனால், நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பதிலாக அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி வருகின்றனா். இதுதொடா்பாக, அந்த அரசியல் கட்சி நிா்வாகிகளால் நியாயவிலைக் கடை பணியாளா்கள் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படுவதில் உள்ள அரசியல் குறுக்கீடுகளைப் போக்கி, நியாயவிலைக் கடை பணியாளா்கள் சுதந்திரமாக செயல்பட உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.