மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு வாழும் காலம்வரைசிறை தண்டனை
மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு வாழும் காலம்வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நாகை போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.


மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தந்தைக்கு வாழும் காலம்வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நாகை போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்தவா் அபுல்கலாம் ( 40). காா் ஓட்டுநா். இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 5-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது 14 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபுல்கலாமை கைது செய்தனா்.
இந்த வழக்கு, நாகை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அபுல்கலாமுக்கு வாழும் காலம்வரை சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நாகை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...