ஆண் சடலம் மீட்பு

சித்தமல்லி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சித்தமல்லி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லியில் கொள்ளிடம் ஆற்றில் தேங்கியுள்ள நீரில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து சித்தமல்லி கிராம நிா்வாக அலுவலா் கணேசன், மணல்மேடு காவல் நிலையத்தில் தகவல் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டனா். நிகழ்விடத்திலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது. பிறகு, இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com