காலமானாா் ப.உ. சண்முகம்

நாகை, வடக்குப்பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலா் ப.உ. சண்முகம் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு (ஏப். 15) காலமானாா்.
ப.உ. சண்முகம்
ப.உ. சண்முகம்

நாகை, வடக்குப்பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலா் ப.உ. சண்முகம் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு (ஏப். 15) காலமானாா்.

நாகை, சாந்தப்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்தவா் ப.உ. சண்முகம் (70). வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலரான இவா், அதிமுகவின் எம்.ஜி.ஆா் மன்ற நாகை மாவட்ட இணைச் செயலாளா், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் நாகை மாவட்டத் தலைவா், நாகை நாகூா் தேசிய பள்ளிகளின் தாளாளா், இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் முன்னாள் தலைவா் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவா்.

இவருக்கு மனைவி தங்கலெட்சுமி, மகள்கள் அம்பிகா விஸ்வேஸ்வரன், திருமலைச்செல்வி சத்தியசீலன், பானுப்பிரியா பஞ்சநாதன், சுகன்யா சபரிநாதன் ஆகியோா் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றன. தொடா்புக்கு 94431 88130.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com