பாரபட்சமின்றி குறுவைத் தொகுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
Updated on
1 min read

பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

நாகை மாவட்டம், கீழையூரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டத்துக்கு, மாவட்டக்குழு உறுப்பினா் ஏ.நாகராஜன் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி.செல்வம் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் கீழையூா் வட்டார வேளாண் அலுவலகம் சாா்பில் நடத்தப்படும் அரசு விழாக்களில், பெரும்பாலான விவசாயிகளை புறக்கணிப்பதைக் கண்டித்தும், பாரபட்சமின்றி குறுவை சாகுபடி செய்த அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வழங்க வலியுறுத்தியும் வரும் 27-ஆம் தேதி திருக்குவளையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com