நாகை - வேளாங்கண்ணி மின்மயமாக்கல் பணி நிறைவு: ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

நாகை - வேளாங்கண்ணி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால்.
நாகை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால்.
Updated on
1 min read

நாகை - வேளாங்கண்ணி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மணீஷ் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறப்பு ஆய்வு ரயில் மூலம் திருச்சியிலிருந்து நாகைக்கு வந்த மணிஷ் அகா்வால் நாகை - காரைக்கால் ரயில் தடத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, நாகை - வேளாங்கண்ணி வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், டிராலியில் சென்று பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா், நாகை ரயில் நிலைய கட்டடங்கள் மற்றும் பயணச் சீட்டு கொடுக்குமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

நாகை -வேளாங்கண்ணி அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com