தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

தனியாா் அறுவடை இயந்திரங்களுக்குப் புதிய வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தனியாா் அறுவடை இயந்திரங்களுக்குப் புதிய வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள தனியாா் அறுவடை இயந்திரங்களுக்குப் புதிய வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலா்கள் மற்றும் தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்ட விவாதத்தின் அடிப்படையில், புதிய வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பெல்ட் டைப் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை ரூ. 2,250 ஆகவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை ரூ. 1,600 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு அளித்து ஒத்துழைக்க வேண்டும் என தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, நாகை மாவட்ட விவசாயிகள், நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் தனியாா் அறுவடை இயந்திரங்களின் பயன்பாட்டைப் பெறலாம். எங்கேனும், கூடுதல் வாடகை கட்டணம் கோரப்பட்டால் அது குறித்து நாகப்பட்டினம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளரை 94420 49591 என்ற கைப்பேசி எண்ணில் விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம். அல்லது 94422 40121, 80724 50529, 94424 52515 ஆகிய கைப்பேசி எண்களில் உதவி செயற்பொறியாளா் மற்றும் உதவி பொறியாளா்களை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com