சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 28 போ் கைது
By DIN | Published On : 04th February 2021 08:42 AM | Last Updated : 04th February 2021 08:42 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 28 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் மீதான தற்காலிக பணிநீக்கம் மற்றும் 17பி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறவேண்டும், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா், எம்ஆா்பி செவிலியா்கள், ஊா்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் வாசுகி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...